வள்ளுவம் தந்த குறள்...

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, February 11, 2012

வாழ்வின் சுவடும் பதிவுகள் காட்டும்..!


  11
FEB      வாழ்வின் சுவடும் பதிவுகள் காட்டும்..!
2012     என் கனவுக் குதிரை :: 1

வாழ்க்கையும் வாழ்வாதாரமும்
அன்பைபோறுத்தே அமைந்துள்ளது,
அன்பினிய அரண் அமையுங்கால்
அகிலமும் வெல்லும் படையின்றி,
அசைவின் சிறுதுளியும் காதல்
கடைக்கண் காட்டிடுமே,
காலம் இனிவசமில்லை
கடக்கும் பல எல்லை,
வானம் இனிவசப்படும் கைக்குள்
வசந்தம் இசைப்படும் நினைவில்,
எல்லாம் புலரும் நலமே நாளும்
வாழ்வின் சுவடும் பதிவுகள் காட்டும்..!
- கவிஞர். கவின்முருகு

ஆண்டவன் கட்டளை...

ஆறுமனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு! (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ளமனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)
 

Monday, January 30, 2012

என் கனவுக்குதிரை



நான் கடவுள்...!



பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா ,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருகரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பசலை நோயுண்ணும் உடலே...


முகையென மார்பும் - கரும்
முகிலென பிடரியும் - நீர்புல
மீனென விழியும் - செந்நா
மொழியலர் வாயும் - கீற்றென
மெல்லி டையும் - நினைவால்
நெஞ்சமர் தாரகையே - யாவும்
நீருபூக்குமென் றஞ்சி - காலச்
சுழற்சியில் மாயும் - பசலை
நோயுண்ணும் உடலே...!!!
- கவின்முருகு...