Monday, December 5, 2011

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
குரல்: டி.எம்.எஸ்
இசை:
பாடல்: கண்ணதாசன்
படம்: அருணோதயம்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கதைகட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி
உன் குணத்துக்கு தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

மயிலை பார்த்து கரடி யென்பான்
மானை பார்த்து வேங்கை என்பான்
குயிலை பார்த்து ஆந்தை யென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனை போல்
என்னை பார்த்தால் என்ன செய்வேன்
சிலர் என்னை பார்த்தால் என்ன செய்வேன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நாந்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்ல தானே வார்த்தையில்லை
அதை சொல்ல தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி - உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...


1 comments:

Post a Comment