ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
படம்: சாரதா
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்
பெண்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்கு பெயர் என்ன?
ஆண்: குடும்பம்
பெண்: நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலமையின் முடிவென்ன?
ஆண்: துயரம்
பெண்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன?
ஆண்: மௌனம்
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்
பெண்: இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
ஆண்: அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம்
அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம்
பெண்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை
ஆண்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்
பெண்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தால் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தால் மனம் பொறுக்கவில்லை
ஆண்: வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை
பெண்: கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி
ஆண்: சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
பெண்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?
ஆண்: காதல்
1 comments:
M!!beautiful song 🎶!!
Post a Comment